அகவீடு !

அன்பென்று அடிமையாகி
ஆடம்பரம் தேடி
அறியாமையில் மூழ்கி
அல்லல் பல பட்டு
அனுதினமும் ஏங்கி
ஆண்டவனே கதி என்று
அடைக்கலம் புகுந்தேன்!
அல்லல் களைந்தான்
அயலான் அகன்றான்
அருளைச் சொரிந்தான்
அன்பினில் திளைத்தேன்
அகவீட்டை அடைந்தேன் !

You Might Also Like

Leave a Reply