முடிவே ஆரம்பம் !

வருவதெல்லாம் இனி வசந்தக் காலமே !

காலமே கண்ணாகி கருத்தொருமித்து இரு !

இரு, இழந்ததை நினைத்துக் கவலைப்படாமல் !

படாமல் பட்டும் தொடாமல் தொட்டும் வாழ் !

வாழு, வகையறிந்து, வருத்தத்தை தொலைத்து !

தொலைத்ததை கண்டுபிடி தொலைத்த இடத்தில் !

இடத்தில் இடராதே, இடி விழுந்தாலும் கலங்காதே !

கலங்காதே, காலம் வீணே கழிந்ததே என்று !

என்றென்றும் உள்ளவன் உன்னை காப்பான் !

காப்பான், கதவடைத்தான் என்று கதறுகிறாய் !

கதறினால் கர்மவினை அது போய் விடுமா ?

விடு …வெறுப்பை, கோபத்தை, பயத்தை, கவலையை !

கவலைப்பட்டு என்ன பயனை அடைந்தாய் ?

அடைவதும் ஒரு நாள் துறப்பதற்கே !

துறப்பது துன்பமா அல்லது இன்பமா ?

இன்பத்தை துறப்பதால் அது துறவாகுமா ?

ஆகும் அனைத்தும் நன்மதி படைத்தால் !

படைத்தல் பழவினையின் விளையாட்டே !

விளையாடு குதூகலமாய், சோர்வின்றி இரு !

இரு சும்மா இரு, சோம்பி இருக்காதே !

இருக்காதே மனதை இருளாக்கிக் கொண்டு !

கொண்டு வந்ததும், கொண்டு போவதும் எதுவுமில்லை !

எதுவுமில்லை என்றறிந்தும் எகத்தாளமிடுகிறாய் !

எகத்தாளம் முடிந்தால், ஏகத்தாளம் கேட்பாய் !

கேட்பாய் இதுவரை கேளாததை எல்லாம் !

எல்லாம் அவனன்றி வேறெதுவும் இல்லை !

இல்லை இனி துன்பம் உனக்கில்லை !

உனக்கில்லை துன்பம் தரும் மறுபிறவி !

மறுபிறவியில் மரணமில்லா பெருவாழ்வு பெறுவாய் !

பெறுவாய் அனைத்தையும் கொடுப்பதற்கே !

கொடுப்பது குறைவிலாது நிறைந்தது !

நிறைந்தது நிறைமனம் பெற்றது !

You Might Also Like

Leave a Reply