ஏக பிரவேசம் !

அவனிடம் இருந்து எடுத்து
அவன் மேலேயே கட்டி
எனதென மார்த்தட்டி
இறுமாந்து நின்றேன்.
ஒரு சிறு குலுக்களால்
அத்தனையும் சரிய
இடிந்து போய் உட்கார்ந்தேன்.
என்னே அவன் விந்தை?
விந்தையினால் விழிப்புற்றேன்.
யான் எனதென்று ஏதுமில்லா
ஏகப் பரவெளியில் பிரவேசித்தேன்!

You Might Also Like

Leave a Reply