இரு வரியில் ஒரு கவிதை !

அருட்பெரும் சோதியிடம் கேட்டேன்
கற்பூர உடல் வேண்டும் என்று !

கற்பூரமாய் சோதியில் கலந்துப்போக
கறையேதும் இல்லை இங்கு !

ஆழ்ந்துப் போனவனே அழகாகிப் போகிறான்
சலனமற்றவனே சாரதியாகிறான் !

தயவினை எதிர்பார்த்தே தனித்து நிற்கும்
துணிவினை இழந்தாய் !

தனக்குத் தானே ஆட முடியாததால்
அடுத்தவர்க்கு ஆடுகிறான் !

கைவிட்டு விட்டாய் என்கிறாய்
சுமந்து கொண்டிருப்பவனைப் பார்த்து !

தெளிவான நீர் வேண்டும் என்கிறாய்
குளத்தில் கல்லெறிந்துக் கொண்டே !

தனித்தப் புள்ளிகள் ஒன்று சேர்ந்ததும்
அழகிய கோலமானது !

ஒற்றை ஆடையும் நிர்மூலமானதும்
நிர்வாணமாய் நின்றேனே !

உண்மை பிரகாசிக்கும் போது
உறக்கம் விழித்தேன் !

You Might Also Like

Leave a Reply