கண்ணன் கருணை !

கைகளிலே உளிக் கொண்டு
கடவுளை வடித்தெடுக்க
கற்களைத் தேடினேன்
காடுமலை சுற்றித் திரிந்தேன்
கைப்பட்ட கற்கள் எல்லாம்
கை உளிப் பட்டதும் தகர்ந்து விட
கல்லாகி காட்டினில் நின்றேன்
கருணையோடு கண்ணன் வந்தனன்
கல்லான என் சாபம் நீக்கினன்
கண்களிலே கண்ணீர் பெருக
கண்ணனையே சரணடைந்தேன் !

You Might Also Like

Leave a Reply